குறுங்கருத்து
உன் கடமைகளை செய்ய தவறாதே!
தவறினால் பழி சொல்லை ஏற்கவேண்டும் மறவாதே!
நல்ல செயல்களை செய்ய பழகிக்கொள்!
தகாத காரியங்களை செய்யாது விலகிக்கொள்!
ஏமாற்றி களிக்காதே!
ஏமாந்து நிற்காதே!
எவரையும் புண் படுத்தி பேசாதே!
வீணாக தரம் கெட்டு தாழாதே!
பிறரை ஒப்பிட்டு வாழாதே!
உன்னையே ஏமாற்றி வீழாதே!
தெளிவாய் சிந்திப்பாயாக!
குழம்பிக் கெடாதே!
குழப்பத்தில் தீர்வு தேடாதே!
நல்லார் தமை நாள் தோறும் நேசித்திரு!
நீ உய்ய அது ஓன்றே வழி யோசித்திரு!
கிட்டாததை எண்ணி கலங்கிடாதே!
கிட்டியதை தொலைத்து தவித்திடாதே!
ஆசைக்கு எல்லை வகுத்திடு!ஆனந்தத்திற்கு அர்த்தம் புரிந்திடு!
துன்பம் என்னை துரத்துகிறதே என்று அழுகின்றாய்!
இன்பம் எங்கு என்று தேட மறந்து நிற்கின்றாய்!
பொய் பேசி கொண்டதெல்லாம் பொய்யாகிப் போய்விடுமே!
பிறருக்கு தீங்கு செய்ய எண்ணாதே!
அது உன்னையே தாக்கும் மறவாதே!
பிற உயிர்களுக்கு அன்பு காட்டு!
இயல வில்லையேல் துன்பம் செய்யாதிரு!
தோல்வி அடைந்து விடுவாய் என்று எண்ணி கலங்காதே!
வெற்றி எனும் ஊருக்கு சென்றடைய தோல்விதான் வழிகாட்டி - மறவாதே!
சிந்தனையை ஒருமைபடுத்து!
எடுத்த காரியத்தை திறம்பட நடத்து!
பிறருக்கு கொடுப்பதால் கெடுவதி ல்லை!
பிறரை கெடுப்பதால் நீ வாழ்வதில்லை!
நீ கற்ற கல்வி பணம் சேர்க்க உதவும்!
உதவாது, வாழ்க்கையின் தத்துவத்தை அறிந்து கொள்ள!
உன்னால் உன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையில்!
உனக்காக எதை சேர்த்துவைத்து காப்பாற்றிக் கொள்ள போகிறாய்!
ஊன் வளர்க்க உண்ணுகின்றாய்!
வளர்த்த ஊன் உன்னை விட்டு மறைந்து விடும் பார்!
நீ கற்ற கல்வி பணம் சேர்க்க உதவும்!
உதவாது, வாழ்க்கையின் தத்துவத்தை அறிந்து கொள்ள!
பிறருக்காக உன் சுகத்தை இழைக்கின்றாய்!
சுகத்தை இழந்த பின் வாழ்வென்ன வாழ்வோ ? சொல் ?
நடக்கும் நிகழ்வுகள் உண்மைபோல் தெரியும்!
உண்மையை அறிந்தால் ஏதும் நிகழவில்லை என்று புரியும்!
வாழ்வுதான் மிக முக்கியம் என்பதுபோல் காட்சி அளிக்கும்!
மரணம் தான் முக்கியம் என்று சாட்சி அளிக்கும்!
இறைவனின் அருளை பெற தவிக்கின்றாய்!
தாயின் கருணையை கண்டதில்லையோ!
இறைமையை அவளில் உணரவில்லையா!
புரிந்து கொள்ள முடியாத விந்தை மனித வாழ்வு!
புரிந்து கொண்டால் சிந்தை தெளிந்த வாழ்வு!
பகைமையை மறந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள!
சமாதானமே நிம்மதியை தரும்!
பகையால் தூக்கம் கெடும், துக்கம் சேரும்!
சுயநலமாக இருக்காதே!
தன் நலமே இல்லாது ஒருவரும் இங்கு உயிர் வாழ இயலாது!
நிலை இல்லாத உலகம்!
இதில் நீ நிலைத்திட நினைப்பது அவலம்!
பண வேட்டையில் உன் வாழ்நாளை கழிக்கின்றாய்! உன் குணம் வேட்டையாடப்பட்டு வீணே அழிகின்றாய்!
தீங்கிழைத்து நீ அடைந்ததெல்லாம்!
உனக்கு தீங்காய் வந்தடையும்!
ஏற்றமும் தாழ்வும் பொருளாதாரத்தால் வருவது தவறல்ல!
தவறு என்றாகும், மனத்தால், குணத்தால் தாழ்வடைந்தால்!
பேராசையே பொய் உறைக்கத் தூண்டும்!
மாறாக, சீராசையே மெய் அறிவுடன் நல் வாழ்வு வாழ்வும்!
நீதியை கேட ்டறி , தர்மத்தை கற்றுணர், சட்டத்தை மதித்து வாழ், வானுலகமும் உனை போற்றும் பார்!
மனித வாழ்வு அற்புதமானது!
அதை அற்பத்தனமாக்கி விடாதே!
தன்னலம் கருதாது வாழ்விங்கு இயலாது!
சிறிதேனும் பிறர் நலம் கருதாது வாழும் வாழ்வு நிறைவாகாது!
நல்ல உள்ளங்கள் நல்ல செயல்களையே நாடும்!
நல்ல செயல்களால் நாடே உயர்வடையும்!
நல்ல செயல் செய்ய இயலவில்லை எனினும்,
கெடுசெயல் செய்யாதிருப்பதே நற்செயலாம் !
எண்ணங்களின் வெளிப்பாடு சொற்களாம்!
நல்லெண்ணத்தின் வெளிப்பாடு நற்சொற்கலாம்!
குறைத்து பேசுக, குறிப்பறிந்து பேசுக, இனியதை பேசுக, பழகுக - பேசாதிருக்கும் நிலை!
சினம் கொண்டால் சிந்தனை சீர்கெடும், துன்பம் சேர்க்கும் செயல்நாடும், வ ீண் வாதனை வந்து சேரும் !
பொய்யுரைத்து வாழதெல்லாம் வாழ்வல்ல!
மெய்யுணர்ந்து வாழும் நிலை தவனிலையே!
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது மனிதா, உனக்கு பொருந்தாது!
சுற்றமும், நட்பும் பாராட்டும்படி வாழ்வதே உனக்கு சிறப்பு!
தீயதை என்னாது இருத்தல் தவமாக கொண்டால், நீங்கது செயல் வடிவம் கொள்ளாமல் விழுமே!
தனக்கென்று ஏதும் இல்லாமல், தர்மம் செய்ய இங்கு இயலாது!
நீ எண்ணியதெல்லாம் சரிதானா, என்று எண்ணிப்பார்த்தாயா ?
எண்ணமதனை சரி செய்யும் வழிதனை யோசித்தாயா!
மதங்கள் தோன்றியது உன்னை உன்னத மனிதனாக்க!
மனிதனோ மதம்கொண்டு மோதி சாய்கின்றான்!
வெற்றிதான் வாழ்வின் லட்சியம் என்றால், உயிரிழந்து தோற்றதுதான் வாழ்வின் மிச்சம்!
தீங்கது செய்தல் நன்மைபோல் தெரிந்து, பெரும் தீ போல் தொடர்ந்து வந்தெறிக்கும்!
தான் படைத்தனைத்தையும் காப்பான் இறைவன்!
தான் பெற்றதனைத்தையும் காப்பவள் அன்னை!
மனம் போகும் வழியெல்லாம் போனாய்!
வாழ்வு கெட்டு வீழ்ந்து நின்றாய் வீணாய்!
எல்லோரிடமும் அன்பு காட்ட ு!
நாம் ஒருவருக்கு ஒருவர் வேண்டியவர்களே!
மனிதநேயம் மகத்தானது!
நேசித்துப்பார் புரியும் அது!
சாதிகள் பேசி சாதிக்காதே!
அது சதி என்று மறவதே!
உன்னை புரிந்து கொள்ள முடியாத நிலையில்,
இன்னொரு துணையை இணைத்து,
மண வாழ்வில் எதை புரிந்து கொள்ள போகிறாய்!
அமைதியும் சாந்தமும் இறைவனிடம் மட்டுமல்ல!
பெண்மை நிறைந்த தாயிடமும் இறைவன் கொடுத்திருக்கிறான் !
கொடுப்பது எதுவாயினும் கொள்ளுவார் தமை அறிந்து ஆராய்ந்து கொடு !
கடமையை தவறாது செய்!
அவரவர் பிறப்பிற்கு ஏற்றாற்போல் கடமையும் அமைகிறது!
அதை மறுக்காமல் செய்!
வாழ்க்கையை சுமையாக நினைக்காதே!
நல்லவர் தமக்கு சுமை தாங்கியாக வாழ்ந்து பார்!
வாழ்க்கை சுவையாக மாறும் நிலை காண்பாய்!
துயர் எண்ணாது கருமம் செய்!
பலன் எண்ணாது தருமம் செய்!
தரம் எண்ணாது அன்பு செய்!
மதம் எண்ணாது பக்தி செய்!
உடலையும் காக்கவேண்டும், அதைவிட அதிக சிரத்தையுடன் மனதையும் காக்கவேண்டும்.
வாழும் இலட்சியத்தை நீ அடைய போராடுகின்றாய்!
உனை வீழ்த்தும் லட்சியத்தில் காலன ் குறியாக இருக்கின்றான்!
எண்ணங்களின் மூட்டைகள் மனிதர்கள்!
எண்ணிக்கை இல்லா எண்ணங்களில் வாழ்கிறவன் மனிதன்!
சினம் கொண்டு சீரழியாதே!
சினத்தால் நன்மை இல்லை!
அதை தொலைத்தால் பகை இல்லை!
சினம் அறிவுக்கு பகை! அறிவு வாழ்விற்கு துணை!
மனம் ஒரு குழந்தை போல்!
அதை வளர்க்கும் கலையை கற்றுக்கொண்டால்
நீ சொல்லுவதை